லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் சிக்கியுள்ள இலங்கையர்
லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய பல நபர்களில் இலங்கைப் பெண்ணொருவரும் அடங்குவதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) மன்சூரியில் இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. .
சிவில் பாதுகாப்பு, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இராணுவம் தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நேற்றிரவு இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், சமீபத்திய வெள்ளம் காரணமாக குறித்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக லெபனான் குடிமைத் தற்காப்பு இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் ரேமண்ட் கட்டார் தெரிவிததுள்ளார்.
மீட்புப் பணிகளை அதிகரிக்க உள்துறை அமைச்சருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லெபனான் பாராளுமன்ற உறுப்பினர் ரஸி அல்-ஹாஜ், தனது ஆதாரங்களின்படி இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கும் ஆறு குடிமக்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீட்டுப் பணியாளரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தன்னிடம் இருப்பதாக கூறியிருந்தார்.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் விளிம்புகளில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ஒரு பரந்த பிராந்திய மோதல் குறித்து ஆழ்ந்த கவலைகள் நிறைந்துள்ளன.
இதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 070386754, 071960810 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.