டயானாவின் யோசனைக்கு கீதா எதிர்ப்பு

இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் முன்மொழிவுக்கு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டார்.

சமூக ஊடகங்களை விட பெண்களும் குழந்தைகளும் கஞ்சா மற்றும் கசிப்பு காரணமாக பத்து மடங்கு பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

“இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள்.

கஞ்சா போதைக்கு அடிமையானவர் வீட்டிற்கு வந்தால் பெண்களும் குழந்தைகளும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என அறிய முடியும்.

இலங்கையில் சமூக ஊடகங்களை விட பெண்களும் குழந்தைகளும் ‘கசிப்பு’ மற்றும் கஞ்சாவால் பத்து மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இதேவேளை, அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான வழிமுறையாக கஞ்சாவை ஏற்றுமதி பயிராக வளர்ப்பதை சட்டப்பூர்வமாக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீண்டும் பாராளுமன்றில் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *