ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 320 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் தற்போது குறைந்தது 320 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வுத் துறையின்படி, ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்றையதினம் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 30 நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதிக்கு வடமேற்கே 40 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 12.11, 12.19, 12.42 ஆகிய நேரங்களில் முறையே 6.1, 5.6, 6.2 என ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *