பஸ்ஸொன்றின் மீது முறிந்து வீழ்ந்த மரம் – ஐவர் உயிரிழப்பு
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டப்பகுதியில் பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து காரணயமாக டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 17பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஐவர் உயிரிழந்ததை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் உறுபடுத்தியுள்ளார்.