பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு (28.09.2022) ஹட்டன்
கல்வி வலயத்தால்
தேரிவுசெய்யப்பட்ட வறிய
குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள கோட்டம் 2, 3ல் உள்ள 13 பாடசாலைகளைச் சேர்ந்த 180 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நோர்வூட் அயரபி தமிழ் வித்தியாலயத்திலும் மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியிலும் இடம்பெற்றது. ஆயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்