முஹம்மது நபியின் பிறந்தநாளில் தாமரை கோபுரம் பச்சை, வெள்ளை நிறத்தில் ஒளிரும்
தாமரை கோபுரம் எதிர்வரும் 28ஆம் திகதி மிலாத் உன் நபி (முஹம்மது நபியின் பிறந்தநாளை) கொண்டாடும் வகையில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும் என்று தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டர்ஸ் டவர்) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பண்டிகைகள் மற்றும் முக்கிய உற்சவங்களின் போது தாமரை கோபுரத்தின் வர்ணங்கள் மாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.