வெளிநாடு செல்லும் பெண்களின் வீதம் அதிகரிப்பு;

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டில் இருந்து வெளியேறுபவர்களில் பெண்களின் வீதம் அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு பின்னரே நாட்ரடை விட்டு வெளியேறும் பெண்களின் வீதம் அதிகரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின் நிமித்தம் சவூதி, கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்றவர்களில் 67 வீதமானோர் பெண்களாகவும், 33 வீதமானோர் ஆண்களாகவும் காணப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் அதிகளவானோர் ஆண்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியோரில் ஆண்களின் வீதம் ஒருசில வருடங்களில் கூடி குறைந்தாலும் ஒட்டுமொத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்களை விட அதிக வீதத்தையே வெளிப்படுத்துகின்றது.

இருப்பினும் 2021 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

இதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் வேலை நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 40 வீதமானோர் பெண்கள். இது கடந்த வருடத்தை விட 7 வீத அதிகரிப்பாகும்.

இவர்களில் 60 வீதமானோர் வீட்டு பராமரிப்பு உதவியாளர்களாவும், 30 வீதமானோர் குறைந்தளவு மூளையை பயன்படுத்த கூடிய தொழில்களுக்காகவும் 1.08 வீதமானோர் நடுத்தர தொழில்களுக்காகவும் வெளியேறி உள்ளனர்.

1.18 வீதமானோர் சிறந்த தொழில் தகைமை கொண்டவர்களாகவும், 5.5 வீதமானோர் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும், 2 வீதமானோர் அலுவலக பணிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் நாட்டை விட்டு வெளியேறிய ஆண்களின் வீதம் 2021 ஆம் ஆண்டில் 67 வீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 60 வீதம் ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *