கொழும்பில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க தடை!
கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நினைவேந்தலை, 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் முதற்தடவையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் இன்று மன்றுரைத்துள்ளனர்.
பொலிஸார் முன்வைத்த கோரிக்கையினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே, திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.