தேயிலை உற்பத்தி வீழ்ச்சி
கடந்த ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி இடம்பெற்றுள்ளதுடன், 2018ம் ஆண்டு அது 04 மில்லியன் கிலோகிராமால் குறைவடைந்துள்ளது.
வறட்சி, இரசாயண பதார்த்தங்களின் பயன்பாடு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை ஆகியன தேயிலை உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளன.
எனினும் கடந்த ஆண்டு உலக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச தேயிலை குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.