ஆட்ட நாயகன் விருதை மைதான ஊழியர்களுக்கு கொடுத்த முஹம்மத் சிராஜ்!
இன்று நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின இதில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.இலங்கை துடுப்பாட்ட வீரர்களை தனது நேர்த்தியான பந்து வீச்சால் இலங்கை அணியை 50 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழக்க முக்கிய பங்கு வகித்த மொஹமட் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகன் விருதாக கிடைத்த 5 ஆயிரம் அமெரிக்கா டொலர்களை மைதான ஊழியர்களுக்கு கொடுத்ததன் மூலம் தனது உயர்ந்த உள்ளத்தை உலகிற்கு எடுத்துக் காட்டினார் மொஹமட் சிராஜ்.