அமெரிக்காவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியை காண்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னாள் கேட்பன் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சென்றுள்ளார்.
இதன்போது இரசிகர் ஒருவர் ஒரு கரத்தில் ஒட்டோகிராஃப்பையும் மறுக்கையில் சொக்கலேட்டினை வைத்துக்கொண்டு அவசரமாக தோனியிடம் கையெழுத்தினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.
இதனை உணர்ந்துக்கொண்ட தோனி அவருக்கு அருகில் சென்று ஓட்டோகிராப் வழங்கியது மாத்திரமின்றி இரசிகரின் கையிலிருந்த சொக்கலேட்டினையும் எவ்வித சலனமுமின்றி பறித்துக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு தோனி இரசிகர்கள் மத்தியில் மேலும் ஆனந்தத்தை பெருக்கியுள்ளது.
தற்போது இணையத்தளங்களில் இந்த நிகழ்வு வைரலாகியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.