நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி! ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய பகிரங்க எச்சரிக்கை!

 

சிங்கள பௌத்த ஆட்சியாளரை நியமிப்பதற்காக முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று தமது உயிரைத் தியாகம் செய்து திட்டங்களைத் தயாரித்ததாகக் கூறுவது நகைப்புக்குரியது என ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் வணக்கத்திற்குரிய அனுநாயக்க கப்பிட்டியாகொட சிறினிமல நா தேரர் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை
சனல் 4 நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமக்கு தோன்றுவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் குழு முன்னிலையில் கர்தினால் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதே பொருத்தமானது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *