மக்கா இஸ்லாமிய மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட 11 கோரிக்கைகள்!

 

கடந்த 13,14 ஆகிய இரு தினங்களில் உலகின் 85 நாடுகளில் இருந்து 150பெருந்தகைகள் கலந்துகொண்ட சர்வதேச இஸ்லாமிய மாநாடு நேற்று இரவு (திங்கள் 14.08.2023) நிறைவுற்றது…

சவுதி அரேபிய அரசாங்கத்தின் முழுச் செலவில் அனைத்து வகையிலும் மிகவும் உயர் தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு சனிக்கிழமை உம்ரா செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

ஒருவர் தன்னிடம் இல்லாததை அடுத்தவரிடமிருந்து பெற்றுக்கொண்டு தன்னை முழுமைப்படுத்திக் கொள்ளல் அடுத்தவர்களுடன் தொடர்சியான நல்லுறவைப் பேனுதல் எனும் கருத்தைச் சுமந்த ‘‘தொடர்பாடல், முழுமை பெறல்’’ எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாபெரும் மாநாடு மக்காவின் ஹரம் ஷரீபிற்கு அண்மையில் நடாத்தப்பட்டது.

இரண்டு நாட்களில் எட்டு அமர்வுகளில் பிரிக்கப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஏழு பிரதான தலைப்புக்களில் ஆய்வுத் தலைப்புக்கள் உலகின் தலைசிறந்த உலமாக்களால் முன்வைக்கப்பட்டன. இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர்கள், மார்க்கத்தீர்ப்பாயங்களின் தலைமை முப்திகள், மார்க்க அறிஞர்கள், ஆளுமைகள் என பலரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் சிலர் இதில் சிறப்புரையாற்றினர்.

நேற்றிரவு நிறைவு பெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து இம்மாநாட்டை நடத்தி அனைவருக்கும் இடையில் ஒற்றுமையையும் சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்காலப்பயணத்திற்கும் தூண்டுகோளாக அமைந்த இம்மாநாட்டை பாராட்டினர். தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்காகவும் உழைக்கும் ஸவுதி அரேபிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தித்தோடு தொடர்ந்தும் இவ்வாரான மாநாடுகளை நடத்தி இஸ்லாமிய உம்மத்தை ஒற்றுமைப்படுத்த அல்லாஹ் அவர்களுக்கு உதவ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார்கள். மற்றும் இம்மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முஸ்லிம் விவகார அமைச்சர் கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல் லதீப் ஆலுஷ் ஷெய்க், அமைச்சின் ஊழியர்கள் அனைவருக்கும் தங்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

இம்மாநாட்டின் தீர்மானங்களாக பின்வரும் 11 அம்சங்களை அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த 11 விதந்துறைப்புக்களையும் உள்ளடக்கியதாக எதிர்வரும் காலத்தில் இவ்வாரான மாநாடுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

01. இரு புனிதஸ்தளங்ளின் சேவகரின் கீழ் நடைபெறுவதற்கு ஒப்புதல் வழங்கிய மன்னர் ஸல்மான் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் ஆகியோருக்கு இம்மாநாடு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது. அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றது.

02. சமூகங்களுக்கிடையில் சக வாழ்வு, சகிப்புத்தன்மையை வழுப்படுத்தல். கருத்து முரண்பாடு மற்றும் பிரிவினையை ஒழித்தல், இஸ்லாமி ஒற்றுமையை பலப்படுத்தல், இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் சேவை செய்தல் என்பவற்றில் அறிஞர்களாலும், பத்வா அமைப்புக்களாலும், இஸ்லாமிய விவகார அமைச்சுக்கள், திணைக்களங்களாலும் செய்யப்பட்டிருக்கும் முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுகின்றது.

03. நிச்சயமாக இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்கான முதலாவது அத்திவாரம் வணக்க வழிபாடுகளினால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதுதான் இதன்பாலே அனைத்து நபிமார்களும் அழைத்தார்கள் என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்துகின்றது.

04. மார்க்க ஆதாரங்களுக்கு ஏற்ப அதன் அடிப்படையிலேயே பத்வாக்கள் வழங்கப்படுவது அவசியமாகும், குழப்பங்களைத் தவிர்த்து நன்மைகளை அவை கொண்டு வரவேண்டும், பத்வாக்கள் வழங்குவதற்கு தகுதியானவர்களிடமிருந்தே பத்வாக்கள் பெறப்பட வேண்டும். உதிரியான பத்வாக்களைத் தவிர்ப்பதும் அத்தியவசியமானது என்பதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

05. நாஸ்தீகம், பண்பாட்டுச் சீரழிவு என்பவற்றிலிருந்து சமூகங்களைப் பாதுகாப்பைக் கட்டியம் கூறும் அடிப்படையில் குடும்பத்தைப் பாதுகாப்பதும், இளம் தலைமுறையினை முறையாக வளர்ப்பதும் இன்றியமையாததாகும். முறையான பரிகாரம், பாதுகாப்பு என்பவற்றை இலக்காகக் கொண்ட பல்வேறு செயற்திட்டங்களின் ஊடாக இவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

06. இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் சேவை செய்வதிலும் மார்க்க விவகாரத் திணைக்களங்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், அறிஞர்களுக்கு மத்தியில் தொடர்ச்சியான உறவைப் பேணி அவர்களுக்கிடையில் முழுமைத்துவத்தை உருவாக்குவதற்காக ஸவுதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் முயற்சிகளை இம்மாநாடு பெரிதும் மதிக்கின்றது.

07. உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்தொற்றும் உடன்பாடு என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய விவகாரங்களில் அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், இஸ்லாமிய விவகாரத் திணைக்களங்கள் தொடர்ச்சியான உறவையும், அனுபவப் பகிர்வையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு இம்மாநாடு அழைப்பு விடுக்கின்றது.

08. குர்ஆனையும், ஸுன்னாவையும் பற்றிப்பிடிப்பதே மார்க்கத்தின் அடிப்படை, அதில் வழிகேடு றெிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்பு உள்ளது என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்துவதுடன் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அவற்றை சரியான அடிப்படையில் விளங்கி அவை இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொள்வது இன்றியமையாயதாகும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

09. பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள், மார்க்க உபநியாசங்களில் நடுநிலை நீதம் என்பவற்றை மிக உயர்ந்த அடிப்படையில் பேணுவது இஸ்லாமிய உலகின் அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், இஸ்லாமிய விவகார அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பொறுப்பு எனவும் பண்பாட்டுச் சிதைவு, எல்லை மீறல், தீவிரவாதம் என்பவற்றுக் எதிராகப் போராடுதல், மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிறல்கள் மூலம் இமாம்கள், கதீப்களை தயார்படுத்துவதின் ஊடாக இதை சாத்தியப்படுத்தலாம் என்பதையும் இம்மாநாடு உறுதிப்படுத்துகின்றது.

10. இஸ்லாத்தை கொச்சைப் படுத்துவதற்கு எதிராகவும் இஸ்லாத்தின் தாரளத் தன்மை, அதன் நீதம், அன்பு அநியாயம் அத்துமீறலை அது ஹராமாக்கியிருப்பது என்பவற்றை தெளிவுபடுத்துவதும், தீவிரவாதக் குழுக்களின் சிந்தனைகள் ஒழுங்கீனமான அதன் போக்குகள் அதனால் இஸ்லாத்திற்கு ஏற்படும் ஊறுகள் என்பவற்றை எடுத்துறைப்பதும், அவைகள் தங்கள் செயற்பாடுகளின் மூலம் பித்னாக்களையும் பிழவுகளையும் தோற்றுவிக்கின்றன சமூகங்களுக்கிடையில் பாதுகாப்பின்மை மற்றும் நிலையற்ற தண்மையையுமே பரப்புகின்றன என்பதை தெளிவுபடுத்துவதையும் இம்மாநாடு அவசியப்படுத்துகின்றது.

11. புனித குர்ஆனின் பிரதிகளை தொடர்ச்சியாக எரித்து கோபத்தை ஊட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது. நிச்சயாக இவ்வாரான படு மோசமான செயற்பாடுகள் வெறுப்புணர்வையும், காழ்ப்புணர்ச்சியையும் இணப்பாகுபாட்டையும் தூண்டுவதாகும் என்பதோடு மனத குழத்திற்கு மத்தியில் இணைந்து வாழ்வதற்கான விழுமியங்களுக்கும் முரணானதாகும் என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்துகின்றது.

அத்தோடு சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் உலகளாவிய முஸ்லிம் அறிஞர்கள் பத்வா அமைப்புக்கள் இஸ்லாமிய விவகாரத் திணைக்களங்கள் என்பவற்றுக்கிடையில் தொடர்பையும் முழுமைத்துவத்தையும் பேணுவதற்காக நீதம் நடுநிலை என்பவற்றைப் பரப்பவும் எடுக்கப்படும் முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுவதோடு, இவ்விடயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு தொடர்ச்சியாக இம்மாநாடு நடாத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *