கூண்டுச் சண்டைக்குத் தயாராகும் உலக செல்வந்தர்கள்!
இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள கேஜ் பைற் எனப்படும் கூண்டுச்சண்டைப் போட்டியில் மோதுவதற்கு உலகின் முன்னணி தொழில்நுட்ப செல்வந்தர்களான மார்க் ஜுக்கர்பெர்க்கும் மற்றும் எலோன் மஸ்க்கும் தயாராகியுள்ளனர்.
அமெரிக்காவில் முன்னாள் படையினருக்கான நலத்திட்டங்களுக்கு நிதிசேர்க்கும் வகையில் இந்தப் போட்டி இடம்பெற்று வருகிறது.
சமூக ஊடகத்தில் நேரலை
இந்த மோதல் முன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்ட சமூக ஊடகத்தில் (X) நேரலை செய்யப்படும் என்று எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றவர் என்பதால் இந்த மோதல் எலோன் மஸ்கிற்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.