கொழுப்பில் உணரப்பட்ட நிலநடுக்கம்!
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
5.8 ரிச்டர் அளவில் இது பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் சிறிதளவு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.