ரஷ்யாவில் அவசர நிலை பிரகடனம் புடின் தலைமறைவு!
ரஷ்யாவில் தலைநகர் மொஸ்கோ உட்பட பல பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத் தலைமையை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் உறுதியளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாக்னர் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் இன்று (24) காலை ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் நகரத்தில் இருபத்தைந்து இராணுவ வீரர்களுடன் இராணுவத் தளத்தைக் கைப்பற்றியதாக அறிவித்தார்.
தனது படைகளை குறிவைத்து ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
வாக்னர் கூலிப்படைத் தலைவரின் அறிக்கைக்குப் பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார், மேலும் தனது நாடு ஒரு பெரிய துரோகத்தை சந்தித்ததாகக் கூறினார்.
கூலிப்படை நடவடிக்கை தேசத்துரோகச் செயல் என்றும், அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
ரொஸ்டோவ் நிலைமை ஆபத்தானது என்பதை ஒப்புக்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி, தாய்நாட்டிற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான போரின் தொடக்கத்தில், ரஷ்ய ஜனாதிபதி வாக்னர் கூலிப்படையை தனது படைகளுடன் போர்க்களத்திற்கு அனுப்பினார்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, கூலிப்படையின் தலைவருக்கும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ரஷ்ய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
எனினும் ரஷ்யப் படைகள் கூலிப்படையினரை தாக்க ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் ஜனாதிபதி புடின் பாதுபான இடத்தில் தலைமறைவாக இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.