இலங்கையில் பாகிஸ்தான் கடற்படை கப்பல்!
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான திப்பு சுல்தான் கப்பல் உத்தியோகபூர்வமான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று காலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பை வழங்கியுள்ளனர்.
168 கடற்படையினரை கொண்டுள்ள இந்த திப்பு சுல்தான் கப்பலின் கட்டளை அதிகாரியாக ஜாவாட் ஹூசைன் கடமையாற்றுகிறார்.
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான இந்த கப்பல் நாளை மறுதினம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளதுடன் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கு கடலில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளது