மேடை ஏறி ஏ.ஆர்.ரஹ்மானை பாட விடாமல் தடுத்த பொலிஸ்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஹிந்தி மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பெற்றுள்ளார்.
ரஹ்மான் இப்போது உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேயில் ஒரு பெரிய இசை நிகழ்ச்சி நடந்தது.
தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்
எண்ணெய் பசை சருமம் உஷார்!
நடிகை கல்யாணியின் மகளா இது, அவரைப்போலவே உள்ளாரா?
சோயா சங்க்ஸ் பிரியாணி|soya chunks biryani
மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோது, போலீஸ்காரர் ஒருவர் மேடைக்கு வந்து, ரஹ்மானிடம் பாடுவதை நிறுத்தச் சொன்னார். அவர் மேடையில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரஹ்மானும் மேடையில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றார்.
இதற்கு விளக்கம் அளித்த புனே காவல்துறை, இரவு 10 மணி வரை மட்டுமே இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியளித்ததாகவும், அதையும் மீறி ரஹ்மான் பாடியதால், கச்சேரியை ரத்து செய்ததாகக் கூறியுள்ளனர்.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.