உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடன்!
நிதித்துறையில் பாதுகாப்பு வலையமைப்பு திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிதிகள் வைப்பு பாதுகாப்பு நெட்வொர்க்கிற்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் முழு வங்கி முறைமையையும் பலப்படுத்துவது மிகவும் முக்கியமானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்