அடுப்பு இல்லாமல் ஒம்லட் போட்ட இளைஞர்
தற்போது கோடைக்காலம் என்பதால் அதிகப்படியான வெப்பம் நம் எல்லோரையும் வாட்டி வதைக்கின்றது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் வாலிபரொருவர் அடுப்பில்லாமல் கொளுத்தும் வெயிலிலேயே ஆம்லெட் போட்டு அசத்தியுள்ளார்.
அந்த வாலிபர், மொட்டைமாடி கைப்பிடி சுவரில் நன்றாக வெயில்படும்படி கடாயை வைத்து, பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கைகளால் பரப்பி விடுகின்றார்.
சில நிமிடங்கள் அதை அப்படியே விட்டுவிட்டார். கொளுத்தும் வெயில் முட்டை ஆம்லெட்டாக மாறுவதை காணக்கூடியதாக இருந்ததாம். அடுப்பில்லாமலே சமைத்துவிடுவேன் என்று பலர் கூறி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், இந்த இளைஞன் அதை நிரூபித்துவிட்டார்.