நீதிமன்றத்தில் சரணடையும் டிரம்ப் வரலாறு காணாத பாதுகாப்பு!

 

மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் சரணடைய டிரம்ப் முடிவு செய்துள்ளார். வாஷிங்டன், கடந்த 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாச பட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்சுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்சை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரச்சார நிதிச் சட்டங்களை மீறியதற்காக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் டிரம்பே தெரிவித்தது பரபரப்பானது.ந்தநிலையில் அவர் விரைவில் சரணடைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தன்னை கைது செய்தது தவறு என்று அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னணியில் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அமெரிக்க நிருபரின் வழக்கை கோர்ட்டு முடிவு செய்யும்: பிளிங்கனுக்கு லாவ்ரவ் பதில் இந்த வழக்கு மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் சரணடைய டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதால் நியூயார்க் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மன்ஹாட்டன் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ல. விஐபிக்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நீதிமன்றம் செல்லும் சாலைகளில் ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் ஒரு தொழிலதிபரும் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்ப்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், இவரது இயற்பெயர் ஸ்டெபானி கிளிபோர்ட். ஸ்டோர்மி டேனியல்ஸின் கூறிய தகவல்படி , அவர் ஜூலை 2006 இல் ஒரு கோல்ப் போட்டியின் போது டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். ஆபாச நட்சத்திரம் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு அப்போது 27 வயது, டிரம்புக்கு 60 வயது.டிரம்பை சந்தித்தபோது, அவரது மூன்றாவது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்தார். பரோன் பிறந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. டிரம்பின் மெய்க்காப்பாளர்கள் தன்னை பென்ட்ஹவுஸில் இரவு உணவிற்கு அழைத்ததாக ஸ்டோர்மி கூறினார். டிரம்புடன் தனக்கு இருந்த உறவு மற்றும் அவரது உடல் தோற்றம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை ஸ்டோர்மி டேனியல்ஸ் தனது “முழு வெளிப்படுத்தல்” புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்தநிலையில் டிரம்ப் குறித்து பிரிட்டிஸ் செய்தி நிறுவனமான தி டைம்ஸ் நாளிதழுக்கு ஸ்டோர்மி டேனியல்ஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் ”டொனால்ட் டிரம்பை பார்த்து எனக்கு பயமில்லை. அவரை நிர்வாணமாக பார்த்தவள் நான். எனவே அவர் ஆடையுடன் வந்து என்னை பயமுறுத்த முடியாது. டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே ஒரு கலவரத்தைத் தூண்டிவிட்டு, மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியவர். அவர் தற்போது கைது செய்யப்பட்டாலும் அல்லது விளைவு எதுவாக இருந்தாலும், அது வன்முறையை ஏற்படுத்தப் போகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *