முடிக்குரிய இளவரசராக தனது மகனை அவசரமாக நியமித்தார் ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan), தனது மகனை அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார்.

அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (62), ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கிறார். இவர் கடந்த மே மாதம் தனது உடன்பிறவா சகோதரர் ஷேக் கலீபாவின் மரணத்தையடுத்து அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னராகவும் பதவியேற்றார்.

அபுதாபி ஆட்சியாளரே ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக பதவி வகிப்பது பாரம்பரியமாகவுள்ளது.

இந்நிலையில், அபுதாபியின் முடிக்குரிய வாரிசாக தனது மூத்த மகனான ஷேக் காலித்தை (Sheikh Khaled) ஸேக் மொஹம்மத் பின் ஸயீட் அல் நெஹ்யான் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *