தனக்குத் தானே கல்லறை கட்டிய பிரபல தமிழ் திரைப்பட நடிகை!

தமிழ்ப்பட நடிகை ரேகா தனக்கு தானே கல்லறை கட்டிய விடயம் மீண்டும் வைரலாகியுள்ளது.

புன்னகை மன்னன், கடலோரக் கவிதைகள் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகை ரேகா. கதாநாயகியாக தமிழ், மலையாளப் படங்களிலும், குணச்சித்திர வேடத்தில் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரேகா, சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார்.

தனக்கு தானே கல்லறை
தன் மீது அதீத அன்பு கொண்ட ரேகா, இறந்த பிறகும் அவருடன் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக அவரது சமாதிக்கு அருகே தனக்கும் கல்லறை கட்டியுள்ளார்.

மேலும் இறந்த பிறகு தன் உடலை அங்கே அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஏற்கனவே இந்த செய்தி வெளியாகி இருந்தாலும், தற்போது வைரலாகி வருகிறது.

உயிருடன் இருக்கும்போதே தனக்கு தானே கல்லறை கட்டிய விடயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரேகா தஷரதம் (மலையாளம்) படத்திற்காக பிலிம் பேர் விருதையும், தமிழ்நாட்டின் கலைமாமணி விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *