உலகின் மிகப்பெரிய தேரை கண்டுபிடிப்பு!
உலகின் மிகவும் பெரிய கரும்புத் தேரை அவுஸ்திரேலியா – வடக்கு குயின்ஸ்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டோட்ஜில்லா என பெயரிடப்பட்டுள்ள இந்த தேரை இது சுமார் 2.7 கிலோ எடை கொண்டது. குயின்ஸ்லாந்தின் கான்வே தேசிய பூங்காவில் இந்த தேரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது புதிதாகப் பிறந்த மனிதக் குழந்தைகளின் எடைக்கு சமமான நியையை கொண்டுள்ளதாகவும், கால்கள் உடைய கால்பந்து போன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பூங்காவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் இந்த தேரையை கண்டுபிடித்துள்ளார். இதுவொரு பெண் தேரையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தேரை கருணைக்கொலை செய்யப்பட்டு பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.