நானுஓயா விபத்தில் உயிர் தப்பிய நபர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
நானுஓயா விபத்தில் பஸ் மோதிய வேனில் பயணித்தவர்கள் உள்ளடங்களாக 7 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த போது அந்த வழியாக மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, தனது பேஸ்புக்கில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“பஸ் நான் செலுத்திய லொறியை மோதும் அளவுக்கு வந்தது. அது மணிக்கு 80 கிலோமீற்றர் வெகத்தில் பயணித்திருக்கும். வேனில் மோதியதுடன் அதில் பயணித்த யாரையுமே காண முடியவில்லை. வேன் தூள்தூளானது. நான் அதிர்ச்சியில் லொறியை இன்னொருவருக்கு கொடுத்து செலுத்தச் சொன்னேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.