இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், நத்தார் வழிபாடுகள் நடைபெறும் தேவாலயங்கள் மற்றும் மக்கள் கூடும் நகரங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.