கையில் எப்போதும் கைப்பையுடன் காணப்படும் இளவரசி டயானாவின் இரகசியம்!

பிரித்தானிய ராஜ குடும்பத்துப்பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது கையில் ஒரு சிறு பையுடன் காணப்படுவதுண்டு…

மாகாராணியாரானாலும் சரி, இளவரசி கேட் ஆனாலும் சரி, அவரது மாமியாரான இளவரசி டயானா ஆனாலும் சரி.

ஆனால், ஒவ்வொருவரின் கைப்பைக்குப் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

இளவரசி டயானாவின் கைப்பை
பொதுவாகவே ராஜ குடும்பத்துப் பெண்களை அரைகுறை உடையுடன் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர்களை பாப்பராஸிகள் என்பார்கள்.

டயானாவைப் பொருத்தவரை, அவரைப் புகைப்படம் எடுக்க பின்தொடர்ந்த கூட்டம் பெரியது. சொல்லப்போனால், டயானாவும் அவரது காதலர் டோடியும் காரில் செல்லும்போது அவர்களை புகைப்படம் எடுக்க ஒரு கூட்டம் பாப்பராஸிகள் துரத்தியதாகவும், அதனால்தான் அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி டயானா உயிரிழந்ததாகவும்கூட கூறப்படுவதுண்டு.

ஆக, டயானாவைப் பொருத்தவரை, தன்னை ஆபாசமாக அல்லது கவர்ச்சியாக என்றும் சொல்லலாம், புகைப்படம் எடுக்க சிலர் காத்திருப்பார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

ஏராளம் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் இளவரசி டயானா. அந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவர் காரிலிருந்து இறங்கும்போது தனது கையில் வைத்திருக்கும் ஒரு சிறுபையை தன் மார்பில் அவர் வைத்துக்கொள்வதை பல புகைப்படங்களில் காணலாம்.

இந்த பாப்பராஸிகள் டயானா குனியும்போது அவரது மார்பு தெரியும் வகையில் புகைப்படம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே, தனது மார்பில் ஒரு கைப்பையை வைத்துக்கொண்டு காரிலிருந்து இறங்குவதை வழக்கமாகவே ஆக்கிக்கொண்டாராம் டயானா.

மானத்தை மறைக்கும் பைகள்
இந்த பைகளை மார்பை மறைக்கும் பைகள் என வேடிக்கையாக இளவரசி டயானாவே சொல்வதுண்டு என்கிறார் Chelseaவை மையமாகக் கொண்ட Anya Hindmarch.

ஏனென்றால் Anyaதான் இளவரசி டயானாவுக்கான கைப்பைகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *