தீபம் ஏன் ஏற்ற வேண்டும்?

வீட்டில் நடைபெறும் விசேஷம் முதல் கடவுளை வழிபடுவது வரை எல்லாவற்றுக்கும் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும் என்று வேத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலனைத் தரும். நாள் தோறும் தீபம் ஏற்றப்படும் வீட்டில், தெய்வ அனுகூலம் பெருகுவதால் கெட்ட சக்திகள் அந்த வீட்டினை அண்டாது என்பது ஐதீகம்.

தீபம் ஏற்றுதல் இறைவழிபாட்டில் முக்கியமான ஒரு நிகழ்வாகும். தினமும் காலை மற்றும் மாலையில் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பொதுவாக நம் முன்னோர்கள் மற்றும் பெரியோர்கள் கூறுவது வழக்கம். அதை கடைபிடிக்கும் ஒவ்வொரு வீட்டிலேயும் லட்சுமி குடியிருப்பாள்.

பொதுவாக தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது. இவ்வாறு பலவிதங்களில் ஏற்றப்படும் தீபங்களின் பலன்கள் மற்றும் அதனை ஏற்றும் முறையினை குறித்து தெரிந்துகொள்வோம்.

ஏன் தீபம் ஏற்ற வேண்டும்?

இறைவன் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அகம் மற்றும் புறம்  இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்குகிறது. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம் மற்றும் லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

தீபம் ஏற்ற சிறந்த  இடங்கள்

தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றப்பட்ட பிறகு தான் ஒரு புதிய செயல்கள் தொடங்கப்படுகின்றன.

தீபம் ஏற்ற நேரம்

வீடுகளில் பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றலாம். அதேபோல் மாலை பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களை தரும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

தீபம் ஏற்றுவதற்கான வழிமுறைகள்

தீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு சுத்தம் செய்து, அதில் மஞ்சள், குங்குமம் இட்டு பூவினைச் சூட்ட வேண்டும். அகல் விளக்கு என்றால் வெளிப்புறத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்றி வைக்கவும். நெய் அல்லது எண்ணெயை விளக்கில் ஊற்றும்போது விளக்கு நிறைய ஊற்றி, திரி இடவேண்டும். விளக்கில் போடப்பட்டு இருக்கும் திரிகள் அனைத்திலும் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கி திரியிட்டால், வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமை நிலைத்து இருக்கும்.

தீபம் ஏற்றும் திசை

*கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் மற்றும் கிரக தோஷம் நீங்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.

*தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் சிறப்பாக விளங்குவர்.

*தெற்கு திசையில் தீபம் ஏற்றக் கூடாது. வீட்டில் யாராவது இறந்து விட்டால் மட்டுமே இத்திசையில் தீபம் ஏற்றலாம்  

*தென்மேற்கு, பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் நீங்கும். திருமணத் தடை நீங்கும்.

*மேற்கு, திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை விலகும்.

*வடமேற்கு திசையில் ஏற்றினால் சகோதர, சகோதரி ஒற்றுமை கூடும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.

*வடக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணம் கைகூடும்.

*வடகிழக்கு, வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடை வள்ளலாக மாறுவார். அவரும் அவர்தம் குடும்ப பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

தீபம் ஏற்றும் முறை

*ஒரு முகம் – நினைத்த செயல்கள் நடக்கும்.

*இரண்டு முகங்கள் – குடும்ப ஒற்றுமை கிடைக்கும்

*மூன்று முகங்கள் – புத்திர தோஷம் விலகும்.

*நான்கு முகங்கள் – பசு, பூமி, லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நீங்கும்.

*ஐந்து முகங்கள் – சகல நன்மையும்

ஐஸ்வர்யங்களும்  கிடைக்கும்.

தீபம் ஏற்றும் எண்ணெயின் பலன்கள்

*நெய் – சகல வித சம்பத்துக்களும் மற்றும் செல்வம் கைகூடும்.

*நல்லெண்ணெய் – உடல் ஆரோக்கியம் கிடைக்கும். நம்மை விட்டு எல்லா பீடைகளும் நீங்கும். நவகிரக தோஷ நிவர்த்தி தரும். எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணெய் உகந்ததாகும்.

*விளக்கு எண்ணெய் – புகழ் கிடைக்கும்.

*தேங்காய் எண்ணெய் – வசீகரம் கூடும்.

*இலுப்பை எண்ணெய் – சகல காரியங் களிலும் வெற்றி கிடைக்கும்.

*வேப்ப எண்ணெய் – கணவன்- மனைவி உறவு நலம் பெறும்.

*வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும்.

*நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் அம்மன் அருள் பெறலாம்.

*கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய், காய்ச்சிய எண்ணெய், அசுத்தமான எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தீபம் ஏற்றக் கூடாது.

தெய்வங்களுக்கு ஏற்ற தீப வழிபாடுகள்

*விநாயகர் – தேங்காய் எண்ணெய், நலம் பயக்கும்

*திருமகள் – பசு நெய், சகல ஐஸ்வர்யமும்  கிடைக்கும்.

*குலதெய்வம் – வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றிட பரிபூரண அருள் கிடைக்கும்.

*அம்மன் – நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மனின் அருள் பார்வை கிட்டும்.

*சிவன், முருகன், திருமால் உள்ளிட்ட ஏனைய தெய்வங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சால சிறந்ததாகும் தீபம் ஏற்றப் பயன்படும் திரிகளின் பலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *