சீனாவின் அலட்சியம் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பில் முக்கிய இருதரப்புக் கடனாளியான சீனா அக்கறை காட்டாததன் காரணமாக டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கு இலங்கையால் உடன்பாடு எட்ட முடியாது என நிதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு நடந்தால் இலங்கைக்கு கடனைப் பெற அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள ஆய்வாளர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.