விமானக் கட்டுப்பாடுகளை நீக்க சீனா திட்டம்!
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பயணிகளை அழைத்து வருவதற்காக தனிப்பட்ட விமானங்களைத் தடைசெய்யும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தில் சீனா செயல்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த விடயம் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார்.
சீனாவின் கோவிட் கொள்கைகள் நிலையானவை மற்றும் தெளிவானவை என்று பெய்ஜிங்கில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஜாவோ செய்தியாளர்களிடம் கூறினார்.
அறிக்கையின்படி, சீனாவின் அதிகாரத்துவத்தை மேற்பார்வையிடும் ஸ்டேட் கவுன்சில், சர்க்யூட்-பிரேக்கர் பொறிமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தயாராகுமாறு அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை சமீபத்தில் கேட்டுக் கொண்டது.
கோவிட்-பாதிக்கப்பட்டவர்களை தங்கள் விமானங்கள் சீனாவிற்குள் கொண்டுவந்தால் விமான நிறுவனங்கள் முன்னதாக தடையை எதிர்கொண்டன. ஹாங்காங்கிற்கான இதேபோன்ற வழிமுறை ஜூலை மாதம் இடைநிறுத்தப்பட்டது.
சீனக் கொள்கை வகுப்பாளர்கள் புதன்கிழமை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் சீர்திருத்தங்களுடன் அழுத்தம் கொடுப்பதாகவும் உறுதியளித்ததால் இந்த அறிக்கை வந்துள்ளது.
இது பெய்ஜிங் அதன் சில கடுமையான கோவிட் நடவடிக்கைகளை எளிதாக்கும் என்ற நம்பிக்கையால் பங்குச் சந்தைகளை மேலும் உயர்த்த உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.