ஆண்டுக்கு 10 குழந்தைகள் மீதம் 150 குழந்தைகள்!
இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோ டோனர், ஆண்டுக்கு 10 குழந்தைகள் மீதம் 150 குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கிலும் சுமார் 15 பேருக்கு உயிரணுக்களை தானம் செய்துள்ளார், இதில் மூன்று கர்ப்பம் தரித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ஜோ கூறுகையில், உயிரணுக்களை தானம் பெற்ற பெண்கள் பலரும் குழந்தை பிறந்ததும் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள்.
பலரும் தற்போது வரை என்னுடன் நட்பில் இருக்கின்றனர், இது அந்த குழந்தைகள் சகோதர, சகோதரிகளை தேடுவதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது மூன்று பேர் கர்ப்பம் தரித்திருப்பது தான் தன்னுடைய சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, சிங்கப்பூர், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உயிரணுக்களை ஜோ தானம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.