மேற்குலக நாடுகளுடன் பேச தயார் ரஷ்யா திடீர் அறிவிப்பு!

நேற்று ஞாயிறு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் பேசுகையில், மேற்குலகம் ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் அதன் நலன்களை முழுமையாக பரிசீலிக்கும் என்றால் மேற்குலகத்தோடு பேச தயார் என்று அறிவித்துள்ளார்-இந்த தகவலை ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது. இவ்வாறு தீவிரமாக மேற்குலகம் ஆராய வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேவேளை ரஷ்யா அதிபரின் செயலாளர் டிமிட்ரி பெஸ்கொவ் அவர்கள் தெரிவிக்கையில்,  புட்டின் பற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் ரஷ்யாவின் பாதுகாப்பு உறுதி தொடர்பாக ஆராயமுடியும் என்று தெரிவித்தார். இவ்வாறான பேச்சுகளுக்கு அமெரிக்கா டிசம்பர்-ஜனவரி உள்ள சூழலுக்கு வர தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். உக்ரைனில் உள்ள நிலைமையை சீர்செர்வது முழுமையாக அமெரிக்காவின் கையில் உள்ளது, ரஷியன் கையில் இல்லை என்று தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *