நாடாளுமன்றம் கலைப்பு 60 நாட்களுக்குள் தேர்தல் என பிரதமர் அறிவிப்பு!

மலேசியாவில் பேரரசர் சுல்தான் அப்துல்லாவின் ஒப்புதலுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். 

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் அறிவித்துள்ளார்.

இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் அறிவிப்பை மலேசிய பிரதமர் வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் கூட இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *