முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதிக்கீடு அளவை அதிகரிக்க தீர்மானம்!

முழுநேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எரிசக்தி அமைச்சு காஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி முழு நேர அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 40 ஆயிரம் மெட்றிக் டொன் அடங்கிய மசகு எண்ணெய் கப்பலொன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பலின் வருகையின் பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *