பிரபல நடிகரின் வற்புறுத்தலால் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா?

சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்வதற்கு பிரபல நடிகரின் வற்புறுத்தல் காரணம் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா நாக சைதன்யா
கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சமந்தா, பின்பு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், சமீபத்தில் அவரை விட்டு பிரிந்துவிட்டார். பின்பு தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

சமீபத்தில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் அக்ஷய் குமாருடன் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அசத்தியதுடன், தனது விவாகரத்து குறித்தான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

இந்நிலையிள் பாலிவுட் சினிமா விமர்சகர் ஒருவர் சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகரின் வற்புறுத்தலால் விவாகரத்தா?
முன்னணி நடிகர்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல் ஆர்கான் என்பவர், சமீபத்தில் சமந்தாவை நாகசைதன்யா விவாகரத்து செய்ததற்கு அமீர்கான் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

அதோடு தனது ட்விட்டரில், மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய நாகசைதன்யாவை எப்படி அமீர்கான் வற்புறுத்தினார் என்பது பற்றிய முழு கதையும் தனக்கு கிடைத்துள்ளது.

அவர் முழு கருப்பு இதயம் கொண்டவர் என்கிற விமர்சனம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு பேசும் பொருளாக மாறி வருகிறது.

நாகசைதன்யா, அமீர்கான் இருவரும் வரவிருக்கும் Laal Singh Chaddha என்னும் இந்தி மொழி படத்தில் ராணுவ வீரர்களாக இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *