இலங்கையில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் முஸ்லிம் ஒருவர் வெளிவிவகார அமைச்சராக நியமனம்!
இலங்கை வரலாற்றில் 45 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 45 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது. பிரதமராக டி.எஸ் . சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
1947 முதல் 1977வரை பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சானது பிரதமர்கள் வசமே காணப்பட்டுள்ளது.
1977 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
கண்டி, ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.சி.எஸ். ஹமீட் 49 ஆயிரத்து 173 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
1977 இல் ஐக்கிய தேசியக்கட்சி அமைத்த அமைச்சரவையில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தனி அமைச்சுகளாக்கப்பட்டன. வெளிவிவகார அமைச்சராக ஏ.சி.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போதே முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.