ரணிலின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டும் ஸ்டீவ் ஹாங்க் தெரிவிப்பு!
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
1977ஆம் ஆண்டு முதல் விக்ரமசிங்கே ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்து “ஊழல் ராஜபக்சக்களை” பாதுகாத்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டிய தருணம் இது என பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.