ராஜபக்ச குடும்பத்தை ஆட்டி படைக்கும் 9ஆம் இலக்கத்தின் மர்மம்!

இலங்கை அரசியலில் கடந்த சில நாட்களாக 9ஆம் இலக்கம் மிகப்பெரிய புரட்சியை செய்து வருகின்றது.

இந்த நிலையில் இலங்கையை பல வருடங்கள் ஆட்சி செய்த ராஜபக்ச குடும்பத்தை ஓடவிட்டு விரட்டும் இலக்கமாக 9ஆம் இலக்கம் மாறியுள்ளது.

எனினும் இந்த 9ஆம் இலக்கத்தின் மர்மம் 2019ஆம் ஆண்டே ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று கொச்சிக்கடை தேவாலயம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றது.

கொச்சிக்கடை தேவாலயத்தில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தேவாலய கடிகாரம் 9 இலக்கத்தை குறிக்கும் வகையில் அப்படியே நின்றுள்ளது.

அப்படியே நின்ற கடிகாரக்கம்பிகள் இரண்டும் காட்டும் இலக்கம் 9 ஆகும்.

அதன் பின்னர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி கோட்டாகோகம ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

மே மாதம் 9ஆம் திகதி பிரதமராகவும் சிங்கள மக்களின் நாயகனாகவும் திகழ்ந்த மஹிந்த ராஜபக்ச மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜுன் மாதம் 9ஆம் திகதி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ச பதிவில் இருந்து இராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் ஜுலை 9ஆம் திகதியான நேற்று போரை முடிவுக்கு கொண்டு வந்த போர் வெற்றி வீரனாக கொண்டாடப்பட்ட கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி மாளிகையை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்.

அத்துடன் 9ஆம் திகதியான நேற்றைய தினம் தனது பதவி விலகலையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி செய்தார்.

இந்த நிலையில் மஹிந்த குடும்பத்திற்கு மிகவும் அபசகுமான இலக்கமாக 9ஆம் இலக்கம் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *