ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக களமிறங்கிய முதல் பொலிஸ் அதிகாரி!

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதரவு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு முதல் முறையாக இந்த பொலிஸ் அதிகாரி தனது ஆரவை வெளிப்படுத்தியுள்ளது.

மகரகமவில் இருந்து காலி முகத்திடல் நோக்கி செல்லும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரி தனது ஹெல்ட்டினை தூக்கி எரிந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் வெற்றியளிக்க வேண்டும் என கூச்சலிட்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரதும் அவதானித்துள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் மேலும் பல பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *