கொழும்பில் அதிகரிக்கும் பதற்றம் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால் கொழும்பில் பெரும் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், கண்ணீர் புகைக்குண்டுத்தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிர​யோகத்தை ​மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கலைத்துவருகின்றனர்.

இரும்புக் கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகளையும் போராட்டக்காரர்கள் இழுத்தெடுத்து கீழே தள்ளிவிடுகின்றனர்.

இந்நிலையில், வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டுள்ளது. அதுதொடர்பில் விரைவில் தகவல்களைத் தருகின்​றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *