ஜனநாயகத்துக்காக ‘ஜம்பர்’ அணியவும் தயார்- சபையில் கரு உருக்கம்!

” நான் நேர்மையாகவே செயற்படுகின்றேன். நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குசென்று ‘ஜம்பர்’ அணியவும் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய மரிக்கார் எம்.பி.,

” போலியான ஆவணங்களை சபாநாயகர் தயாரித்துள்ளார். இதற்காக சிறைக்குசெல்லவேண்டிவரும். எனவே, ‘ஜம்பர்’ அணிவதற்கு தயாராகுங்கள்” என்று உதய கம்மன்பில எம்.பி. விடுத்துள்ள அறிவிப்பு குறித்து சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

” நான் எந்தவொரு போலி ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். நீதியை நிலைநாட்டியதற்காக – ஜனநாயகத்தை பாதுகாத்ததற்காக ‘ஜம்பர்’ அணியவேண்டிவரின் அதையும் செய்வதற்கு தயார்.

நான் நடுநிலைதவறி செயற்படுகின்றேன் என்றால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவாருங்கள்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *