ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியத்திற்கு பிரதமர் கடும் கண்டனம்!
நடந்து வரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் கடும் வருத்தம் தெரிவித்தார்.
இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது. எந்தவொரு வன்முறையையும் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாதுகாப்புப் படையினரும் மற்றும் போராட்டக்காரர்களும் நிதானத்துடன் செயல்படுமாறு பிரதமர் கேட்டுக்கொள்கிறார்.
-பிரதமர் ஊடகப் பிரிவு