பிரதமர் ரணிலின் பிரத்யேக இல்லம் அருகில் பதற்றம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை

கொழும்பு 7ல் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *