விவாகரத்து ஆகியும் பார்த்திபனுடன் சேர துடிக்கும் மனைவி சீதா!
நடிகர் பார்த்திபனை தெரியாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் பார்த்திபன் தனது வாழ்க்கையில் நடிகை சீதா என்பவரை திருமணம் செய்தார். ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகை சீதா.குறிப்பாக 80’s களில் குரு சிஷ்யன், ஆண் பாவம், ராஜநடை போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிகை சீதா படத்தில் நடிப்பதை விரும்பாத போது தான் சுமார் படத்தில் நடிக்காமல் 10 வருடங்களாகவே தனது வாழ்க்கையை இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார் சீதா,
இதனை தொடர்ந்து சில வருடம் கழித்து நடிகை சீதாவுக்கு பார்த்திபனுக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இருவரும் விவாகரத்து பெற்றுள்ளார்கள். பின்னர் தான் சீதா படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 2010ல் சதிஷ் சுதீயை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
இப்படி ஒரு செயலை செய்திருக்கும் நடிகை சீதா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் விவாகரத்து ஆன ஒரு பெண் தனிமையில் வாழ முடியாது, எனக்கு கட்டாயம் ஒரு துணை வேண்டும் என்பதற்காக 40 வயதில் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
சீதாவுக்கு அதிஷுக்கும் சமீபத்தில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இப்போது இரண்டாவது கணவரையும் பிரிந்துள்ளார்.தனது இரு மண வாழ்க்கையும் சரியாக அமையாத நிலையில் தற்போது தனது அம்மா வீட்டில் இருக்கிறாராம் சீதா.
ஆனால் இப்போது தன் முதல் கணவர் பார்த்திபனுடன் சீதா ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.