பத்திரிகை விநியோகப் பணிகளுக்கு பாதிப்பு!
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்புக்கு அப்பாலுள்ள சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பத்திரிகை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இன்மையால், கொழும்பின் சில பகுதிகளில், இன்றைய தினம் பத்திரிகை விநியோகிக்கப்படவில்லை என, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை நீடித்தால், அடுத்த வாரம் முதல் பத்திரிகை விநியோகப் பணிகள் முழுமையாக முடங்கும் என பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.