5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இதனை தெரிவித்தார்.

சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து உரியவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *