பொலிஸாருக்கு சவால் விடுத்த எம்.பியின் மகன்!

தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு ,தற்போது பொலிஸாரால் தேடப்படும் ஒருவரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.

” ஸ்ரீ லங்கா பொலிஸாரே , நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன்.இப்போது என்ன செய்வது ?” என்று இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் அதில் குறிப்பிட்டுள்ள அவர் ,தாம் இருக்குமிடத்தை அவுஸ்திரேலியா என பதிவிட்டுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிசாருக்கே சவால் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *