நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிடுங்கள்!
பொதுமக்கள் உணவுக்காக கஷ்டப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் உணவகம் செயற்படுவது பொருத்தமானது அல்ல. எனவே அந்த உணவகத்தை மூடி விடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் மதிய உணவை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என 55 எம்.பிக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை கடிதமொன்று சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.