இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய 75 மில்லியன் டொலர் தேவை!

இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது என பிரதமர் ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் உரையாற்றி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க, நமது நாட்டின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்க  இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால்.

மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *