சஜித்தை சந்தித்த முன்னணி வெளிநாட்டு தூதுவர்கள்!
இலங்கையில் உள்ள முன்னணி நாடுகளின் 12 தூதுவர்கள் அடங்கிய குழுவினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தூதுவர்கள் உட்பட 12 தூதுவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான அனைத்து உதவிகளை செய்ய, வெளிநாட்டுத் தூதுவர்கள் இதன் போது எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதியளித்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்தன, ஹர்ச டி சில்வா ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது